SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சியினர் ஐந்து பேர் CPM அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனர்
Posted by newscap on February 10, 2008
போலி கம்யுனிஸ்டு என்ற நிலையிலிருந்து பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு தமது மாநிலத்தை கூட்டிக் கொடுக்க வசதியாக மக்களை கேள்வி முறையின்றி ஒடுக்கும் பாசிஸ்டு நிலைக்கு பரிணமித்துவிட்ட கம்முனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா(மார்க்ஸிஸ்ட்) – CPM கட்சியினர் மேலும் ஒரு ஒடுக்குமுறையை போராடும் விவசாயிகள் மீது ஏவிவிட்டுள்ளனர்.
நந்திகிராமில் போராடிய மக்கள் மீது CPM தனது கட்சி குண்டர் படையுடன் தாக்கி பலரை சாகடித்ததுடன் இல்லாமல் போன வருட இறுதியில் அந்த பகுதியில் போலிசு அடக்குமுறையை ஏவி போராடும் மக்களை முற்றிலும் முடக்கியது. ஒடுக்கிய கையோடு நந்திகிராமில் நிலங்கள் கையகப்படுத்தபாடது என்று ஒரு நாள் சொல்லுவது அடுத்த நாளே விருப்பமுள்ளவர்களிடம் கையகப்படுத்தபடும் என்று சொல்லுவது என்று மக்களை குழப்பி வருவதோடு இல்லாமல் CPM அரசின் பன்னாட்டு தரகு சேவையை வெளிப்படையாக விளம்பரப்படுத்தி வந்தனர்.
இதனை தொடரந்து மேவா அரசில் பங்கு வகிக்கும் பார்வார்ட் ப்ளாக் கட்சியினர் தலைமையில் போன வாரம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள், மேவாவில் அனுமதிக்கப்பட்ட SEZ திட்டங்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் போலீசு துப்பாக்கி சுடு நடத்தியது. இதில் 5 பேர் பலியாயினர்.
செய்திரசம்
மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM! « Not Just News said
[…] News: CPM government has shot killed five Forward Bloc party persons over Anti SEZ protest SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சி… கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா – […]